பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா
வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா
இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே
எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே
ஒரு கேள்வி உன்னிடம்
உனை தருவாயா என்னிடம்
தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!
காதல் சிறிதும் குறையாமல்
விழிகள் ஒருநொடி இமைக்காமல்
உன் முகமே தேடுதடி
என்னுயிர் முழுதுமே நீயடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!