உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை.....
என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்
என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்
என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது
என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் பூத்தது
இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....
உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!
நன்றி!! நன்றி!!
பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
பதிலளிநீக்குஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!